பெங்களூரு:


நீடிச்சு இருக்காங்க... நீடிச்சு இருக்காங்க... 144 தடை உத்தரவை நீடிச்சு இருக்காங்க... இது பெங்களூரில்...


காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து வன்முறையாளர்களை கட்டுப்படுத்தவும், பதட்டமான நிலையை போக்கவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.


தற்போது மெதுவாக சகஜநிலை திரும்பி வருகிறது. இருப்பினும் மீண்டும் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க... 144 தடை உத்தரவை வரும் 25ம் தேதி வரை நீடிச்சிருக்காங்க...


இதுகுறித்து பெங்களூரு சிட்டி போலீஸ் கமிஷ்னர் மெக்ரீஷ் தன் டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: பெங்களூருவில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று சொல்லியிருக்கார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: