இன்றைய காலத்தில், பெரும்பாலான பெண்கள் சருமத்தின் அழகை பாதுகாக்க பாடி லோஷன் மற்றும் கிரீம்களை உபோயகப்படுத்துகின்றனர்.  அதிக பணம் செலவழித்து, இதை உபோயோகிப்பதால் நல்ல பலன்களும் கிடைப்பதில்லை. 


இயற்கையான மூலிகை பொடியை நாம் பயன்படுத்தினால் மிருதுவான, பொலிவான சருமம் பெறலாம். 


தேவையான பொருட்கள் : 


பச்சை பயிறு - 250 கிராம் 
கடலை பருப்பு - 250 கிராம் 
கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் 
பூலாங்கிழங்கு - 250 கிராம் 
ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் - 250 கிராம்


ரோஜா இதழுக்கு பதில் ஆவாரம் பூ உபோயப்படுத்துபவர்கள் அதை நன்கு உலர வைத்து சுத்தம் செய்து, காய வைத்த மற்ற பொருள்களுடன் இயந்திரத்தில் திரித்து பொடியாக்கி விட வேண்டும். 


அதன் பிறகு, இந்த பொடியை தினமும் குளிக்கும் போது, முகத்திலும் உடம்பிலும் தேய்த்து சிறுது நேரத்திற்கு பிறகு குளித்து வந்தால், பட்டு போன்ற சருமத்தை நாம் பெறலாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: