சேலம்:
அரை லிட்டர் பால் கறக்குதுங்க... மக்களின் இந்த அதிசய பேச்சு சேலம் முழுவதும் எதிரொலிக்குது. அட என்னங்க... இது அதிசயமா... மாடு பால் கறக்கிறது அதிசயமான்னு கேட்காதீங்க... பால் கறக்கிறது கன்றுக்குட்டிங்க...


 
சேலம் ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி அடுத்த கே .மோரூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (39). விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு மாடு கன்று ஈன்றது. அது, பால் கரக்கும் வகையில் இருந்தது.


 
அப்போது கன்று குட்டியின் மடியிலும் பால் சுரந்து கொட்டியதுதான் அதிசயத்திலும் அதிசயம். இதை பார்த்து பசுவின் உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்தார். தற்போது அந்த கன்றுக்குட்டி அரை லிட்டர் பால் கறக்கிறது. தகவலறிந்த கிராம மக்கள் கன்றுக்குட்டியை அதிசயமாக பார்த்து வருகின்றனர். இந்த தகவல்தான் தற்போது சேலம் முழுவதும் பரவி வருகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: