ரோம்:
தன் உயிர் போனாலும் பரவாயில்லை... தன் குட்டியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று உருவத்தில் சிறியதாக இருந்தாலும் விடாது முயற்சி செய்த எலியின் வீடியோதான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


இத்தாலியின் நேப்பிஸ் நகர சாலை. இங்கு உணவு தேடி அங்கும் இங்கு சென்று கொண்டிருந்தது ஒரு குட்டி எலி. அப்போது அங்கு வரும் பாம்பு ஒன்று அந்த குட்டி எலியை கவ்வியது. அவ்வளவுதான் இதை பார்த்த தாய் எலி, தன்னைவிட உருவத்தில் பெரியதான பாம்பை துரத்திச் சென்று அதன் வாலை சரமாரியாக கடிக்கிறது. இருந்தாலும் குட்டி எலியை விடாமல் அந்த பாம்பு தப்பிக்க பார்க்கிறது.


உன்னை விட்டேனா பார் என்று அந்த எலி கடித்த கடியில் குட்டி எலியை போட்டு விட்டு தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று பாம்பு எஸ்கேப் ஆகிறது. அதன்பிறகும் விட்டதா அந்த தாய் எலி. இல்லையே... என் குட்டியையா கவ்வினாய் என்பது போல்பு தருக்குள் புகுந்த பாம்பை தொடர்ந்து விரட்டிச் சென்றது.


ஒரு நிமிடத்திற்கு பிறகு தாய் எலி, குட்டி எலியை நோக்கி ஓடிவருகிறது. அதுவரை சிறிது கூட அசைவின்றி கிடந்த அந்த குட்டி எலி ஜங்கென்று குதித்து செல்கிறது. இதை அப்பகுதியில் நின்ற ஒருவர் வீடியோவா எடுத்து இணையத்தில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோதான் இப்போது வைரலாக பரவி வருகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: