மும்பை:
மும்பைக்கு ஸ்டாராக இருந்தாலும் எனக்கு மகன்தானே... நான் சொல்றதை கேட்டுத்தானே ஆகணும் என்று களத்தில் குதித்துள்ளார் இவர். யாருன்னு தெரியுங்களா?


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு தானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க அவரின் தாயும், நடிகையுமான நீத்து கபூர் முடிவு செய்துள்ளாராம்.


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிகை தீபிகா படுகோனேவை காதலித்தார். அது முறிந்து போகவே... போனால் போகட்டும் போடா என்பது போல் நடிகை கத்ரீனா கைபை லவ் செய்ய ஆரம்பித்தார். 


அவர்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்வதாக இருந்த நிலையில் மீண்டும் காதலுக்கு ஆப்பு விழுந்தது. இதெல்லாம் எனக்கு சகஜம்ன்னு ரன்பீர் எவ்வித கவலையும் இன்றி தற்போது டில்லியை சேர்ந்த மாடல் அழகியோடு சுற்றி வருகிறாராம்.


இதனால் மகனை பற்றி கவலை கொண்ட அவரது தாயும், நடிகையுமான நீத்து கபூர் அதிரடியாக ஒரு முடிவு செய்துள்ளார். அதாவது நடிகை இல்லாத ஒரு பெண்ணை தானே பார்த்து மகன் ரன்பிருக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்துள்ளாராம்.


போதும் மகனே, நீ காதலித்தது... ஒழுங்காக நான் பார்க்கும் பெண்ணை மணந்து கொள் என்று ரன்பீரிடமும் நீத்து, கண்டிப்பு காட்டியுள்ளாராம். இப்போது பெண் பார்க்கும் பணிகள் மும்முரமாகி விட்டதாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: