மும்பை:
கிங்... கிங்... கிங்... என்று பாலிவுட் வட்டாரங்களே தலைமேல் வைத்து கொண்டாடுது சல்மான்கானை. காரணம் இதுதான்.


கடந்த ரம்ஜான் அன்று வெளியான ‘சுல்தான்' ரிலீசான மூன்றே நாட்களில் 106 கோடி ரூபாயை எட்டி பிடித்துள்ளது.


சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்' படம் செம போடு போட்டு வருவதால் தான் என்றும் கிங்தான் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் சல்மான்கான். 


மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்துள்ளதால் ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்' படத்தின் சாதனையை முந்திவிட்டது. 


வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வசூல் கிங் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் சல்மான்கான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: