பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையும், எழுத்தாளருமான சுஹாசினி மணிரத்னம் தற்போது ஒரு புது அவதாரம் எடுத்துள்ளார்.
முதன்முறையாக மேடை நாடகம் ஒன்றை அவர் இயக்கியுள்ளார். ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த நாடகத்தில் பிரசன்னா, வை.ஜி.மஹேந்திரன், விஜே ரம்யா, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுஹாசினியின் தந்தையும், நடிகருமான சாருஹாசனின் வாழ்க்கை வரலாறு புத்தகமான 'திங்கிங் ஆன் மை பீட்' புத்தகத்தில் உள்ள கதையை கொண்டு இந்நாடகம் உருவாகியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 12-ந்தேதி, கொல்லப்புடி சீனிவாஸ் விருது வழங்கும் நிகழ்த்தியில் இந்த நாடகம் ஒளிபரப்பப்படுகிறது.