பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர் தற்போது 'எதிர்கொள்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். 


இதில் ஹீரோயினாக நடிப்பது யார் தெரியுமா.... மலையாள நடிகை மேக்னா தான். இவர் தமிழில் ''காதல் சொல்ல வந்தேன்'' என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் எதிர்கொள் திரைப்படத்தை ஆர்.ஐய்யனார் என்பவர் இயக்குகிறார். இதில் காளி வெங்கட், அஜெய், சார்மிளா உள்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விழுப்புரம், செஞ்சி மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: