சென்னை:
என்னை போன்றவர்களின் வாழ்வு பறிபோவதை தடுங்கள் என்று துணை நடிகர் ஒருவர் நடிகர் விஷாலுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு எலிமருந்தை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் இளவரசன். இவர் சிறுத்தை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சகுனி உட்பட 40க்கும் அதிகமான திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்தவர்.


இவர் திடீரென எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதற்கு முன்பாக அவர் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:


சில தயாரிப்பாளர்கள் என் சம்பள பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்திருக்கின்றனர். இதனால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். இதன் காரணமாக எனது மனைவியும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தற்போது என்னிடம் இருந்து விவாகரத்தும் கேட்டுள்ளார். இப்படி என்னை போன்று கஷ்டத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்கும் உரிய வருமானம் கிடைக்க வழி வகை செய்யுங்கள் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு எலிமருந்தை குடித்துள்ளார். 


மயங்கிய நிலையில் இருந்த இளவரசனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: