சென்னை:
படத்தோட பரபரப்பு சற்றே ஓய்ந்திருக்க இப்ப சிலைகள் பரபரப்பு ஸ்டார்ட் ஆகிடுச்சுங்க பாஸ்.


என்ன விஷயம் தெரியுங்களா? கபாலி படத்தின் பீவர் இப்போதுதான் சற்றே ஓய்துள்ளது. இருப்பினும் முழுமையாக போகவில்லை என்பதுதான் உண்மை. இப்போ கபாலி சிலைகள் மூலம் அடுத்தது ஸ்டார்ட் ஆகிடுச்சு. 


மலேசியாவைச் சேர்ந்தவர் டத்தோ மாலிக். இவர் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்தான் மலேசியாவில் கபாலி படத்தை ரிலீஸ் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் தற்போது ரஜினிகாந்தின் கபாலி பட உருவத்தை சிலையாக வடித்து விற்பனைக்குக் கொண்டு வந்தே விட்டார். இந்த விற்பனையை ரஜினி தொடங்கி வைத்துள்ளார். இந்த சிலையை பார்த்து ரஜினி ரொம்ப மகிழ்ச்சியாம்... அந்தளவிற்கு செம்ம்ம்மமம தத்ரூபமாக இருந்துள்ளது.


மொத்தம் 2016 சிலைகளை செய்துள்ளார்களாம். படத்தில் வரும் விதம் விதமான கபாலிகளைப் போல சிலை இருக்கும் என்றும் மாலிக் தெரிவித்து...தனது நிறுவன பேஸ்புக் வாயிலாக இந்த சிலையை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.


நடத்துங்க... நடத்துங்... கபாலி பீவர் இன்னும் பற்றிக் கொள்ளதான் செய்யும் போலிருக்கே...


మరింత సమాచారం తెలుసుకోండి: