சென்னை:
சூப்பர்ப்பா... சூப்பர்... கலெக்சன் கிங் ஆகிட்டார் விக்ரம் என்று கோலிவுட் குதூகலப்படுகிறது. கபாலிக்கு பிறகு வசூலில் அள்ளிய படம் இருமுகன் என்றாகிவிட்டது.


விஷயம் என்னன்னா? ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த சீயான் விக்ரம் இப்போ மாஸ் ஹிட் படமாக இருமுகனை கொடுத்து வசூலில் கபாலிக்கு பிறகு நான்தான் என்று வெற்றி கொடியை உயர்த்தி பிடித்துள்ளார்.


ஆரம்பத்தில் விமர்சனங்கள் "ஏக்குபோக்காக" வந்தாலும் சீயான் விக்ரம் தன் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட தற்போது வரை இந்த படம் ரூ.80 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று கோலிவுட் உளவாளி உலகநாதன் ரகசியம் சொல்றார். 


கபாலிக்கு பிறகு வந்த படங்களில் தர்மதுரை மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது. ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டு இருமுகன் சென்னையில் மட்டுமே ரூ.4 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வருடம் வசூலில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்து முதல் 3 இடங்களை பிடித்த படங்கள் என்றால் கபாலி, தெறி, இருமுகன் மட்டுமே என்கின்றனர். இதனால் விக்ரம் செமஹேப்பியாம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: