கடந்த 2014-ம்  ஆண்டு, மனோபாலா தயாரிப்பில், நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த 'சதுரங்கவேட்டை' திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் அறியாமையை பயன்படுத்தி, மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது தெளிவாக காட்டப்பட்டது. 


இதனைத்தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இந்த படத்தை மனோபாலா தயாரிக்கவும், முதல் பாகத்தை இயக்கிய ஹ.வினோத்தே, இதன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கவுள்ளார்.


இதில் ஹீரோவாக அரவிந்த் சுவாமி மற்றும் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளனர். மேலும் ராதா ரவி, நாசர், ஸ்ரீமன், பொன்வண்ணன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். 


இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தெரிகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: