குண்டூர்:
அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் காப்பு மாட்டியுள்ளனர்.


குண்டூர் மாவட்டம் வெங்காயபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 
அவரது பார்க்க அவரது 13 வயது பேத்தி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். இயற்கை உபாதைக்காக பாத்ரூம் சென்ற அந்த சிறுமியை அங்கு நின்றிருந்த ஒரு காமப்பிசாசு பாத்ரூமிற்குள் இழுத்துச் சென்று முறைகேடாக நடக்க முயன்றுள்ளது.  


ஆனால் சிறுமி பலமாக கூச்சல் போடவே ஓடிவந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த காமப்பிசாசை செம கவனிப்பு கவனித்து போலீசில் பிடித்து கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்து போன சிறுமியை இன்னும் அந்த கோர சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து மீளவே இல்லை. 


பிடிப்பட்ட அந்த காமப்பிசாசு குண்டூர் ஏனாதிகாலனியைச் சேர்ந்த ஜபீன் என்பதும், அந்த ஆஸ்பத்திரியில் உள்ள உயர் அதிகாரியின் உறவினர் என்றும் கூறி அங்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: