திருச்சி:
என்ன கோபம்... யாருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. நேற்று தனியார் வங்கிக்கு வந்த லெட்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சியில் உள்ள ஒரு தனியார் வங்கி நேற்று வழக்கம் போல் இயங்கி வந்தது. அப்போது வங்கிக்கு வந்த ஒரு லெட்டரில் வெடிகுண்டு மிரட்டல் இருந்ததாம். அப்புறம் என்ன பற்ற வைத்த வெடியாட்டம் இந்த செய்தி கிடுகிடுவென நகரம் முழுவதும் பரவியது. 


உடன் வங்கியிலிருந்து போலீசாருக்கும் தகவல் பறக்க, வங்கியில் சுமார் ஒரு மணி நேரம் வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு இடம் பாக்கியின்றி சோதனை செய்தனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்த புரளியால் வங்கி பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் அதிர்ந்துதான் போய்விட்டனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: