ஐதராபாத்:
இங்கு கஞ்சா சாக்லெட்... அங்கு போதை பேனா என்று மாணவர்களை தப்பான பாதைக்கு கொண்டுச்செல்ல கயவர்கள் போடும் திட்டங்கள் இருக்கிறதே... தலையை சுற்றவைக்கிறது. விஷயத்தை பாருங்கள்... விஷம் போல் உள்ளது.


ஐதராபாத் போன்ற நகரங்களில் ஹீகா பேனா என்னும் போதை பேனா விற்கப்பட்டு வரும் செய்தி வருகிறது. இதனால் அரசு இதை தடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.


ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவன் ஒருவன் பேனாவை நுகர்ந்து பார்த்துக் கொண்டே இருந்துள்ளான். அவனது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை பிடித்து சோதனை போட்டபோது அந்த பேனா போதை பேனா என்பது தெரிய வந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.


இந்த போதை ஹீகா பேனா பரவலாகவும், எளிமையாகவும் மாணவர்களுக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இதற்கு கல்லூரி, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் அடிமையாகி உள்ளனர். போதையின் வடிவம்தான் எப்படி எல்லாம் உருபெறுகிறது. தற்போது இந்த தகவல் அரசுக்கும் சென்றடைந்ததால் இதை தடுக்கும் முயற்சிகளில் கடுமையாக இறங்கி உள்ளது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: