சென்னை:
சென்னையில் நடந்துள்ள மற்றொரு கொடூர கொலை மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. விஷயம் இதுதான்.


சென்னை கொருக்குப்பேட்டையில் திமுக மகளிர் அணி நிர்வாகி மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பெரும் பரபரப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.


 சென்னையை அடுத்த கொருக்குப்பேட்டை மேற்கு கே.ஜி.கார்டன் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி லட்சுமி (40). இவர் 42வது வட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளர். இந்நிலையில் இவர் தன் வீட்டு அருகில் நடந்து சென்ற போதுதான் அந்த கொடூரம் நடந்துள்ளது. 


லட்சுமியை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாறியாக வெட்டி சாய்த்தனர். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லட்சுமி விழுந்தார். உடன் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.


 இந்த கொடூர சம்பவத்தை கண்டு அலறி அடித்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து லட்சுமியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

லட்சுமி

Image result for லட்சுமியை ஸ்டான்லி அரசு

இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில், லட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே பண விவகாரத்தில் பிரச்னை இருந்தது தெரியவந்துள்ளது.



మరింత సమాచారం తెలుసుకోండి: