சென்னை:
கிரிக்கெட் போட்டியில் மட்டுமில்லை... டுவிட்டரில் கிளீன் போல்டு ஆக்குகிறார் அஸ்வின் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.


விஷயம் என்னன்னா? ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அஸ்வின் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்தார். இதற்கிடையில் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் ஒருவர் எகத்தாளமாக... டுவிட்டரில், 120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 4 பதக்கங்கள் தான் வென்றுள்ளனரா என்று கேலி செய்திருந்தார். 


இதற்கு அஸ்வின் கொடுத்த பதிலடி... செம ஹாட் அண்ட் சுவீட்தான் போங்க... அந்த பாக். ரசிகர் கிளீன் போல்டு ஆகி உள்ளார். அஸ்வின் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா?


"120 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் நாங்கள் 4 பதக்கங்களை வென்று விட்டோம். உலக மக்கள் தொகையில் 6வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் இரண்டாவது பதக்கம் வெல்ல என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பவுண்சர் வீசி அட்டாக் கொடுத்துள்ளார். 


 பாகிஸ்தான் ரியோ பாராலிம்பிக்கில் ஒரே ஒரு வெண்கலம் மட்டுமே வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி மேலும் அந்த ரசிகர் வாய் திறப்பார்... 


మరింత సమాచారం తెలుసుకోండి: