சென்னை:
பொறுத்திருந்து பார்த்தார்... பொறுமையிழந்தார்... வரவில்லை எனில் பாடல் படத்தில் இடம் பெறாது என்றே தெரிவித்து விட்டார். யார் தெரியுங்களா?


இயக்குனர் கவுதம் மேனன் தான். விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படத்தின் வாயிலாக சிம்புவுக்கு தனிபெருமையை ஏற்படுத்தி கொடுத்தவர். இப்போது அவரையே காயப்படுத்தி வருகிறார் சிம்பு. அவர் திருந்தியது போலவே தெரியவில்லை. கௌதம் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்துக்காக வெளிநாட்டில் பாட்டு படப்பிடிப்பு நடந்தது.


இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நாக சைதன்யா கூட வந்து விட்டார். ஆனால் சிம்பு வரவில்லை. வளர்த்து விட்டவரை பதம் பார்த்து விட்டார் சிம்பு. இதனால் சிம்பு வராவிட்டால் அந்த பாடல் படத்தில் இடம் பெறாது என்றே அறிவித்துவிட்டார் கௌதம். ஆமாம் பொறுமைக்கும் ஒரு எல்லை இல்லையா... மோதல் தொடர்கிறது. இனி எந்த காலத்திலும் சிம்பு திருந்தவே மாட்டார் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

 தெலுங்கு ரீமேக்


మరింత సమాచారం తెలుసుకోండి: