ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படம் தற்போது அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படம், இதுவரை ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் முதல் நாள் வசூலை காட்டிலும், அதிகமாக 43 கோடி, வசூலை பெற்றுள்ளது. 


இந்த படத்தின் சக்ஸஸ் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய கலைப்புலி தாணு, ரஞ்சித் இயக்கும் திரைப்படங்களை தயாரிக்க நான் தயார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். 


அதனால் விரைவில், கலைப்புலி தாணு மற்றும் ரஞ்சித் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் 'கபாலி' திரைப்படத்திற்கு பிறகு ரஞ்சித், சூர்யாவை வைத்து  ஒரு படம் இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: