சென்னை:
யார் கூட்டணியை கைவிட்டா என்ன என் கதைக்கு ஆள் கிடைப்பாங்கன்னு தானே களத்துல குதிச்சிருக்காரு நம்ம சுசீந்திரன்.


ஸ்டாராங்கா கதை வைச்சு காம்பரமைஸ் பண்ணிக்காத ஆளு சுசீந்திரன். கதை என்ன கேட்குதோ அதை கொடுத்து ஹிட் அடிச்சுக்கிட்டே இருக்காரு.


இவரு உதயநிதியோட போட்ட கூட்டணி பணால் ஆனாதல கவலையே படலையாம். உடனே இவரே தயாரிப்பாளரா அவதாரம் எடுத்து இருக்காரு. யாரோட தெரியுங்களா...
விஷ்ணுவிஷாலுடன்தான். ஏற்கனவே இந்த கூட்டணி வெற்றி கூட்டணிதானே பாஸ்.


இதில் மஞ்சிமா மோகன் ஹீரோயினாகி இருக்காங்க. அட முக்கியமான வேடத்தில நடிக்கி இருக்கிறது நம்ம வித்தியாசமான பார்த்திபன் தாங்க. ஆகஸ்ட்ல தொடங்கும் படப்பிடிப்பை விரைந்து முடிச்சு திரைக்கு கொண்டு வரதுக்காக "பக்காவா" ஸ்கிரிப்டை ரெடி பண்ணிக்கிட்டு இருக்காராம் சுசீ.


வேலைன்னு வந்த வெள்ளக்காரன் படம் நல்ல பேரையும், வசூலையும் கொடுத்ததால தொடர்ந்து படங்கள் தயாரிக்க விஷ்ணுவிஷால் முடிவு செஞ்சதோட பலன்தான் இந்த படமாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: