சென்னை:
ஊர் பெயர்களை தலைப்பாக வைத்தே படம் எடுத்து வந்த டைரக்டருக்கு இப்போ போதாத நேரம் போல இவருக்கு யாரும் கால்ஷீட் கொடுக்க ரெடியாக இல்லீயாம். என்ன விஷயம்ன்னா?


தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய், அஜித் இருவரையும் வைத்து ஒரு படம் ஹிட் கொடுத்தாலே போதும் நம்ம ரேஞ்சே வேற என்பதுதான் டைரக்டர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அது எப்படியோ இருந்துட்டு போகட்டும். ஆனால் கதைன்னு ஒண்ணு இருககணுமே சாமி... ஒரு படம் பார்த்து ஹிட் கொடுக்கிற ரசிகர்கள் கூட அடுத்த படத்துல கதை இல்லாட்டி கவுத்துவிட்டுடுவாங்கன்னு தெரியாதா?


 டைரக்டர் பேரரசும் வந்த புதுசுல விஜய், அஜித்தை வைத்து தொடர்ந்து ஹிட் கொடுத்தார். அதுக்கு பிறகு இவர் இயக்கிய படங்களின் நிலையே வேறு. ஊர் பேரை மட்டுமே தலைப்பா வைச்சாலும் கதைன்னு பார்த்தா ஒன்றுமே இல்லாட்டி எப்படி ஓடும். இதுல இவரே இயக்கம், பாடல்கள்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா... இப்படிதான்... இப்போ கால்ஷீட் கேட்டு போனா எந்த நடிகரும் முகம் கொடுத்து கூட பேசமாட்டேங்கிறாங்களாம். அதனால தற்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம். முடிவு செய்துட்டாராம். அட இதுலயாவது கதை இருக்குமாங்க...



మరింత సమాచారం తెలుసుకోండి: