சென்னை:
தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால் கோர்ட் அதிரடியாக பிடிவாரண்ட் போட்டு இருக்காங்க... யாருக்கு தெரியுங்களா? 


இயக்குனர் சேரனின் மகளுக்குதான். நீண்ட காலமாக எந்த  படத்தையும் சேரன் இயக்கவில்லை. இவர் குடும்ப பிரச்னைகளில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளார்.


இந்நிலையில் இவர் சினிமா டூ ஹோம் என்ற நிறுவனம் ஒன்றை நடத்தினார். இதன் ஸ்பெஷாலிஸ்டி என்னன்னா? புதுப்படங்களை சிடியிலேயே பார்க்கலாம் என்பது தான்.


இதன் இயக்குனராக இவருடைய மகளே செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பார்ட்னராக இருந்த ஒருவர் அதிலிருந்து விலகினார். அதனால் தான் முதலீடு போட்ட ரூ.4 லட்சத்திற்கான செக்கை வாங்கி தன் கணக்கில் போட அது பவுன்ஸ் ஆகியுள்ளது.


அப்புறம் என்ன இந்த கேஸ் நீதிமன்றத்திற்கு வந்துவிட்டது. சேரனின் மகளை கோர்ட்டில் ஆஜராக பல முறை தெரிவித்தும் அவர் ஆஜராகவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த கோர்ட்... கடைசி வரை அவர் ஆஜராகாத காரணத்தால் பிடிவாரண்ட் போட... இப்போ... சேரன் செம மூட் அவுட்டாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: