சென்னை:
ஹீரோ, வில்லன் என்று எப்படி வேண்டுமானாலும் நடிக்க நான் தயார்... தயார் என்று சௌந்தரராஜா சொல்லியிருக்காருங்க...


யாருங்க இவர் என்று கேட்கிறீர்களா? ‘சுந்தரபாண்டியன்’, ‘தர்மதுரை’ என பல வெற்றிப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர்தான் இந்த சௌந்தரராஜா.


தற்போது ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலின் நண்பனாகவும், ‘கள்ளன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், ‘ஒரு கனவு போல’ படத்தில் கதை நாயகர்களில் ஒருவராகவும் நடித்து வருகிறார். 


இப்படி அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் நிலையில் இவரை ஹீரோவாக நடிக்க கூறி பலர் வந்து கொண்டிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனாலும் ஆளு செம சுதாரிப்புங்க... எப்படி தெரியுங்களா? 


ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி ஹீரோ, வில்லன் என்று எப்படி நடிக்க அழைத்தாலும் சம்மதிப்பேன் என்று சொல்லியிருக்கார் பாருங்க... அப்ப இவர் கோலிவுட்டில் ஜெயிச்சுடுவார்ன்னு சொல்லுங்க... என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: