நடிகர் சூர்யா தற்போது 'எஸ்-3' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த படம் முடித்ததும் அடுத்து அவர் 'கொம்பன்', 'மருது' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு புது படம் நடிக்கவுள்ளார். 


கிராம பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளது. இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், தங்கையாக நடிகை ரித்திகா சிங்க்கும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும், 2டி என்டேர்டைன்மெண்ட்ஸும் இணைந்து தயாரிக்கவுள்ளது.இதன் இசை பணிகளை டி.இமான் மேற்கொள்ள உள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என தெரிகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: