சூர்யா நடிக்கும் 'எஸ்-3' திரைப்படம் வரும் தீவாளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து அவர் 'கொம்பன்', 'மருது' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தைய்யா இயக்கவுள்ள புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ரித்திகா சிங்க் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு வரும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. 


இந்நிலையில் இந்த படத்திற்கு முன்பு சூர்யா ஒரு புது படத்தில் நடிக்கவுள்ளாராம். இதற்காக அவர் தற்போது தீவிரமாக கதை கேட்டு வருகிறார்.மேலும் இயக்குனர் ரஞ்சித், விக்னேஷ் சிவன் மற்றும் 'சேதுபதி' திரைப்பட இயக்குனர் அருண் குமார் ஆகிய மூவரையும் அவர் தேர்ந்தெடுத்து வைத்துள்ளாராம். 


இவர்கள் மூன்று பேரில், ஒருத்தரை அவர் இறுதியாக தேர்வு செய்து, அந்த இயக்குனர் இயக்கவுள்ள திரைப்படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: