
தற்பொழுது அதிகார பூர்வ அறிவிப்பாக தர்பாரில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 29ஆம் தேதி மீண்டும் மும்பையில் தொடங்கும் என்றும் லைகா நிறுவனம் சமூக வலைத்தள அக்கவுண்டில் பதிவு செய்துள்ளது.

மேலும் அடுத்ததாக வரவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பல இதுவரை நடிக்க தொடங்காத புதிய நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலீசாக நடிக்க, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, என பலரும் அவருடன் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார்.
click and follow Indiaherald WhatsApp channel