24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:-

 

பாடலாசிரியர் தரண் பேசியதாவது,

 

இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜாலியான பாடல். முதன்முறையாக அம்ரீஷ்-க்கு எழுதுகிறேன். வித்தியாசமாக எழுத வேண்டும் என்று அப்பாடலைப் பற்றி விளக்கம் கேட்டேன். ‘ஓ கலா’ என்று தொடங்கும்படி பாடலை இயற்றினேன். ஆனால், இப்பாடல் பதிவு முடிந்து கேட்டபோது, தரம்குறைந்த பாடல் என்ற பெயர் பெற்றுவிடும் என்று அதிர்ச்சியடைந்தேன். இயக்குநரிடமும், இசையமைப்பாளரிடமும் தெரிவித்தபோது, அவர்களும் அதைப்புரிந்து கொண்டு மறுமுறை படப்பிடிப்பு செய்தார்கள் என்றார்.

 

நடிகை சங்கீதா பேசும்போது,

 

இப்படத்தில் திரிஷாவின் தோழியாக நடித்திருக்கிறேன். இப்படம் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகிறேன். சில காட்சிகளே வந்தாலும் என்னுடை கதாபாத்திரம் பிடித்ததால் நடித்திருக்கிறேன் என்றார்.

 

இயக்குநர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

 

15 நாட்களுக்கு முன்பு இப்படத்தை பார்க்கும்படி என்னை இயக்குநர் திருஞானம் அழைத்திருந்தார். படம் பார்க்கும் போது 20 படங்கள் இயக்கிய அனுபவம் தெரிந்தது. அவரிடம் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. புது முகம் விஜய்வர்மாவிற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறுமி மானஸ்வி நன்றாக நடித்திருக்கிறார். அவர் நகைச்சுவை நடிகர் கொட்டச்சியின் மகள் என்று பிறகுதான் தெரிந்தது. அம்ரீஷின் இசை சிறப்பாக இருக்கிறது.

 

தான் நடிக்கும் படத்தின் விளம்பரத்திற்கு ஏன் நடிகர், நடிகைகள் வரமால் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. பெரிய நாயகர்கள் ரஜினிகாந்த், விஜய், கமலஹாசன் போன்றோர்களே தாங்கள் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு வரும்போது இவர்கள் ஏன் வராமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. மேலும், உங்களைப் போன்றோர்களை வைத்து படம் எடுத்தால் தான் விளம்பரமாகும் என்று எடுக்கிறோம். இல்லையென்றால், புதுமுகங்களை வைத்தே எடுத்து

விடுவோமே என்றார்.

 

டி.ஷிவா பேசும்போது,

 

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த என் நண்பர்கள் சிறப்பாக இருக்கிறது என்று கூறினார்கள். பெரிய நாயகன் இல்லாமல், விளம்பர நோக்கோடும் இல்லாமல், ஆனால், நட்சத்திர அந்தஸ்த்தோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் திருஞானம்.

 

இப்படிப்பட்ட படத்தின் விளம்பரத்திற்கு திரிஷா வரவில்லையென்பது வருத்தத்திற்குரிய விஷயம். தொடர்ந்து அவர் விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு  கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: