சென்னை:
சென்னை பொண்ணு சுவாதியின் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் ஒரு நல்லதும் நடந்துள்ளது. என்ன தெரியுங்களா?


சென்னை நுங்கம்பாக்கம் உட்பட தமிழகத்தின் 82க்கும் அதிகமான ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா பொறுத்த போறாங்களாம். இதுக்காக 40 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒது‌க்கீடு செய்யப்பட்டுள்ளதாம். 


இந்த ஆண்டு இறுதிக்குள் ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்துவதற்கான பணிகள் நிறைவடையும். இதனால் ரயில் நிலையங்களில் நடக்கும் குற்றச்செயல்கள் குறையும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரயில்வே அதிகாரி அனுபம் சர்மா தெரிவித்துள்ளார். ஏங்க இதை முன்னரே செய்திருந்தால்... இப்பவாவது உடனே செய்யுங்கள் என்கின்றனர் பயணிகள். 


ஒரு பெண்ணின் கொடூர படுகொலையால் மற்ற பயணிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி உள்ளதுதான் வேதனையிலும் வேதனை.


మరింత సమాచారం తెలుసుకోండి: