குஜராத்:
மனைவிக்காக என்று செய்துவிட்டு இப்போது மாமியார் வீட்டில் கம்பியை எண்ணுகிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி. இந்த கூத்து நடந்துள்ளது குஜராத்தில். விஷயம் இதுதான்.


குஜராத்தில் மனைவிக்காக அரசு நிலத்தை விற்ற கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா என்பவர் சமீபத்தில் அரசு நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளார்.


அந்த தனியார் நிறுவனத்தில் பிரதீப் சர்மாவின் மனைவி ஒரு பங்குதாரராக இருந்துள்ளார் என்பதுதான் இந்த விற்பனைக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் புயலை கிளப்ப நிலத்தை விற்றதன் மூலம் ரூ:1 கோடியே 20 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.


 இதையடுத்து பிரதீப் சர்மா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அரசு நிலத்தை விற்பனை செய்த குற்றத்திற்கா தற்போது அவரை போலீசார் கைது செய்து "மாமியார்" வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: