அகமதாபாத்:
கொடூரமே உந்தன் மறு உருவம் மனிதனோ என்று கேட்க வைத்துள்ளது இந்த சம்பவம். அகிம்சையை வளர்த்தெடுத்த காந்தி பிறந்த மண்ணில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.


தெரு நாயின் குரைப்பை கூட சகித்து கொள்ள முடியாத ஒருவர் அதன் மீது ஆசிட்டை ஊற்றி கொன்ற கொடூர சம்பவம்தான் குஜராத் தலைநகர் அகமதாபாத் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அகமதாபாத் நகரில் வீட்டு வசதி குடியிருப்பில் வசித்து வருபவர் கீதன் பட்டேல். இவரது வீட்டிற்கு அருகில் கடந்த சில நாட்களாக தெரு நாய் ஒன்று தொடர்ந்து குரைத்து வந்துள்ளது.


இதன் குரைப்பு சத்தம் கீதன் பட்டேலுக்கு ஆத்திரத்தை கிளப்ப பலமுறை அந்த நாய் கல்லால் அடிப்பட்டுள்ளது. இருந்தாலும் அந்த நாய் அந்த பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்துள்ளது. மீண்டும் அதன் குரைக்க... இதில் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார் கீதன் பட்டேல். இதற்காக அவர் செய்த செயல்தான் மற்ற மனிதர்களையும் சேர்த்து தலை குனிய வைத்துள்ளது.


அந்த நாய் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார் கீதன் பட்டேல். வேதனையில் அந்த நாய் துள்ள துடித்துள்ளது. இதை பார்த்த ஈரமுள்ள நல்ல இதயம் கொண்டு சிலர் நாயை காப்பாற்ற கால்நடை டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த நாய் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கீதன் பட்டேலை கைது செய்தனர். காந்தி பிறந்த மண்ணில்தான் நீயும் பிறந்தாயா?


మరింత సమాచారం తెలుసుకోండి: