ஜம்மு காஷ்மீர்:
ஊடுருவ முயன்றால்... விட்டுடுவோமா என்று தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டின் எல்லையை காத்துள்ளனர் பாதுகாப்பு படையினர். விஷயம் என்னன்னா?


ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் பலியாகினர். 


ஜம்மு காஷ்மீரின் மச்சில் செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது எல்லை பாதுகாப்புப் படையினரும், ராணுவ வீரர்களும் இணைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.


இந்த மோதலில், எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் பரிதாபமாக பலியாகினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஜம்மு காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: