போபால்:
மரத்து போன மனிதாபிமானமற்ற இவர்களின் செயல்தான் நாடு முழுவதில் இருந்து கடும் கண்டனங்களை பெற்று வருகிறது. என்ன விஷயம் தெரியுங்களா?


பஸ்சில் செல்லும் போது மனைவி இறந்து விட்டதால் நடுவழியிலேயே சடலத்துடன் கணவரை இறக்கிவிட்ட கொடூர சம்பவம்தான் அது. இதுதான் தற்போது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் சிங் லோதி. இவரது மனைவி மல்லி பாய். உடல் நலம் சரியில்லாத மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 5 மாத குழந்தை மற்றும் தனது தாயாருடன் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் ராம்சிங். அப்போது பஸ்சில் செல்லும் போதே அவரது மனைவி இறந்துவிட்டார்.


இதையடுத்து பஸ் கண்டக்டர் ராம்சிங்கை பாதி வழியிலேயே இறங்க சொல்லியுள்ளார். அவர் எவ்வளவோ கெஞ்சியும் கேட்காமல் ஈவிரக்கமில்லாமல் நடுகாட்டில் அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுள்ளனர். 


இந்நிலையில் அந்த வழியாக சென்ற வக்கீல்கள் 2 பேர் ராம்சிங்கின் நிலைமையை உணர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து ராம் சிங் லோதி போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈவு இரக்கமின்றி நடந்து கொண்ட பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரவி மக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: