சென்னை:
நேற்று நள்ளிரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையே அதிர்ந்துதான் போய்விட்டது. எதற்காக தெரியுங்களா?


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் நேற்று நள்ளிரவு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்தான். அவர் நலமாக இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


முதல்வர் ஜெயலலிதா, சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அங்கு பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பரபரப்பான சூழல் நிலவியதால் அசாதாரண நிலை ஏற்பட்டது.


முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவிய நிலையில், இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்... தரப்பில் கூறுகையில், “ஜெயலலிதா காய்ச்சல், நீர்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இப்போது நலமாக இருக்கிறார்,” என்று தெரிவித்தனர்.


இந்த தகவல் வெளியில் பரவ அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவியத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் நிலை தேறி வருவதால் இன்று வீடு திரும்பிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Image result for அப்பல்லோவில் முதல்வர் அனுமதி


మరింత సమాచారం తెలుసుకోండి: