சென்னை:
மக்களே... இன்னும் 2 நாளைக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்காம்... இதை சென்னை வானிலை மையத்தினர் சொல்லியிருக்காங்க.


மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவுக்கு போயிடுச்சு. அங்கு மழை வெளுத்து கட்டி வறட்சியை ஓட... ஓட துரத்திடுச்சு. 


 தற்போது அந்த காற்றழுத்தம் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்காம். 


தமிழகத்துக்கு அதிக மழை தரும் வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு முன்னதாக தொடங்கவும் வாய்ப்பு இருக்காம். எனவே மக்களே வெளியில் போகும் போது குடையை எடுத்துக்கிட்டு போங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: