https://twitter.com/rishibagree/status/902421993248612353

மும்பையில் பெய்து வரும் தொடர் பேய்மழையால் சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரமே தற்போது ஸ்தம்பித்துள்ளது. சாலை போக்குவரத்து ரயில் போக்குவரத்து எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் பெய்து வரும் மழையால், மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

Image result for rains in mumbai today


பருவமழை தீவிரமடைவதால் ஏரிகளில் நீர் மட்டம் அதிகரிக்கும் என்று எல்லாராலும் எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக ஓடுகிறது. கனமழை காரணமாக மும்பையின் முக்கிய விபி சாலை பகுதியில் உள்ள இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட சுவரொட்டிகள் 4 பேர் மீது எதிபாராத விதமாக விழுந்தது.



இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள பிரபல சாஃபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: