
அதன்படி 500 டிசைன்கள் கொண்ட ரூ. 222 கோடியில் 1.04 கோடி புடவைகள் துணிகளுக்கான குஜராத் மாநிலத்தில் இருந்தும், தெலுங்கானா கைத்தறி நெசவாளர்களிடமிருந்தும் பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த புடவைகளை நேற்று அரசு கொடுக்க தொடங்கியது. இதற்காக பெண்கள் நீண்ட வரிசையில் கடுப்போடு காத்திருந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பெண்கள் குடுமிகளை இழுத்து கொண்டு மோசமாக சாலையிலேயே சண்டையிட்டனர். அப்படி முண்டியடித்து வாங்கியும் அந்த புடவை நல்ல தரமாக இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டினர். இதனால் புடவைகளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தனர். அந்த புடவைகள் ரூ.50 முதல் ரூ60 வரை மதிப்பு இருக்கும். தரம் குறைவான புடவைகளை கொடுத்து முதல்வர் எங்களை மிகவும் அவமானப்படுத்திவிட்டார். இந்த புடவைகள் தரையை சுத்தமாக துடைக்கக் கூட தரமில்லாதவை என்றனர் பெண்கள்.
click and follow Indiaherald WhatsApp channel