முகம் பொலிவுடன் இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அத்தகைய முகத்தை பொலிவாக வைத்து கொள்ள பேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். அதன் செய்முறையை இப்போது நாம் பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் :


முட்டை - 1 
டிஷ்யூ பேப்பர் - சிறிது


முதலில், முகத்தை சுத்தமான நீரில் கழுவி, நன்கு உலர்த்தி கொள்ளுங்கள். 


பின்பு ஒரு கிண்ணத்தில், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, அதை முகத்தில் தடவி கொள்ளுங்கள்.
இதையடுத்து டிஸ்யூ பேப்பரை, முகத்தின் மேல் வைத்து நன்கு உலர்த்த வேண்டும். 


நன்கு உலர்ந்ததும், மீண்டும் முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி, டிஸ்யூ பேப்பரை வைத்து உலர்த்த வேண்டும்.


இந்த செய்முறையை தொடர்ந்து, நான்கு தடவை பின்பற்றி, அதன் பின் தண்ணீரில் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும். பருக்கள், கரும்புள்ளிகள், அழுக்குகள், ஆகியவை நீங்கி, முகம் பொலிவாக தெரியும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: