ராமேஸ்வரம்:


விஷ ஊசி போட்டு கொலை செய்கின்றனர்... என்று அதிர்ச்சித் தகவலை இலங்கையிலிருந்து தப்பி வந்த இளைஞர் சொன்னது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் அருள் ஜெயரத்தினம். இவர் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் என்று கூறப்படுகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் காவலராக பணியாற்றிய இவரை கைது செய்ய இலங்கை ராணுவத்தினர் முயற்சிக்க... அங்கிருந்து அவர்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி படகு மூலம் தமிழகம் வந்தார்.


அப்படி வந்த ஜெயரத்தினத்தை தனுஷ்கோடி அருகே இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அப்போதுதான் ஒரு அதிர்ச்சித்தகவலை அவர் அணுகுண்டு போல் போட்டு தாக்கி உள்ளார்.


அவர் கண்ணீர் மல்க கூறும்போது, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்று கூறி அப்பாவி தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவம் கைது செய்கின்றனர்.


பின்னர் கொழும்பு, கண்டி அருகே உள்ள தனி சிறையில் அடைத்து சித்ரவதை செய்து, பின்னர் சிகிச்சை என்ற பேரில் விஷ ஊசி போட்டு கொலை செய்துவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் அதிர்வலைகள் நாடு முழுவதும் எழுந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: