சென்னை:
முதல்வரை சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தார் சரத்குமார். என்ன விஷயம்ன்னா...


சரத்குமார் - ராதிகா  தம்பதியின் மகள் ரேயான் - கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் ஆகியோரின் திருமணம் விரைவில் நடக்க இருக்குங்க. 

அபிமன்யு மிதுன்  ரேயான்


இதுக்காக சரத்குமார், ராதிகா ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளனர்.
திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று அவர்கள் முதல்வரிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர். இவர்களின் சந்திப்பு குறித்து கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு முன்கூட்டியே நாமும் சொல்வோம் வாழ்த்துக்களை...


మరింత సమాచారం తెలుసుకోండి: