சென்னை:
முட்டிக்கிட்டாலும் மோதி தலையில் தக்காளி சட்னியே வந்தாலும் ஹீரோவா ஜெயிக்காம விடமாட்டேன்னு கங்கணம் கட்டிய சந்தானம் சொன்னதுபோலவே இப்போ வெற்றி ஹீரோவா மாறிட்டார்.


இதுக்காக இவர் பல படங்களின் காமெடி நடிகர் வேடத்தை தவிர்த்ததும் குறிப்பிடத்தக்கது. காத்திருந்து தில்லுக்கு துட்டை வசூல் படமாக்கிட்டார். இப்போ... இவருக்குன்னு வர்ற ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் ஆயிடுச்சு. அடுத்த படத்துல நடிக்க போயிட்டார். இதற்கிடையில் இவர் செஞ்ச ஒரு விஷயத்தை பார்ப்போமா?


இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தையே தத்தெடுத்து உதவி செய்யவுள்ளதாக தகவல்கள் லீக்காகி உள்ளது. 
இச்செய்தி தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது, அப்படி இது உண்மை என்றால் உண்மையிலேயே பாராட்டணும் சந்தானத்தை...


మరింత సమాచారం తెలుసుకోండి: