சென்னை:
இல்ல.. இல்ல... இந்த ஒரு படத்தில்தான் நடித்து வருகிறேன் என்று தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் விஷால். எதற்காக...


விக்ரமின் 'இருமுகன்' படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளனர் ஷிபுதமீன்ஸ் நிறுவனத்தினர். இவர்கள் அடுத்ததாகவும் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தை தயாரிக்க உள்ளனர் என்பது தெரிந்த விஷயம்.


இதற்கிடையில் விஷால் நடிப்பில் இவர்கள் ஒரு படத்தை தயாரிக்கின்றனர் என்று வதந்தியோ... உண்மையா என்று உணர முடியாத வகையில் ஒரு செய்தி ரவுண்டு கட்டி அடித்தது. 


தற்போது இந்த செய்திக்கு தற்போது விஷால் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். தற்போது 'சுராஜ் இயக்கத்தில் கத்திச்சண்டை படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஷிபுதமீன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இதுவரை எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.


 இந்த படத்திற்கு பிறகு மிஷ்கின் படம், அதற்கு பிறகு லிங்குசாமி இயக்கத்தில் 'சண்டக்கோழி 2' படங்கள் நடிக்க உள்ளதாக தெரிகிறது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: