சென்னை:
26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கைகோர்க்கிறார் இவர்... அவருடன் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. யார்..யாருடன் கைகோர்க்கிறார்கள் என்று பார்ப்போமா?


நடிகை கெளதமிக்கு பாபநாசம் படத்திற்கு பின்னர் ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்தபடி உள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து 'நமது' படத்தில் நடித்து முடித்துள்ளார். 


இந்நிலையில் நடிகர் பிரபுவுடன் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 


1990-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'ராஜா கைய வச்சா' படத்திற்கு தற்போதுதான் பிரபுவுடன் கவுதமி இணைகிறார். இந்த படம் வந்து 26 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து கெளதமியின் செய்தித்தொடர்பாளர் கூறியபோது, 'பிரபுவுடன் இணைந்து நடிக்க கெளதமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உண்மைதான். இதுகுறித்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: