சென்னை:
நல்ல கதை அமைந்தால் அடுத்த நாளே பாலாவுடன் இணைந்து விடுவேன் என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.


ஒருபக்கம் இருமுகன் படத்தின் பணிகள், மறுபுறம் மகளின் திருமண வேலைகள் என்று இறக்கை கட்டாத குறையாக பரபரத்து கொண்டிருக்கிறார் விக்ரம். இதற்கிடையில் இவர் ஒரு பேட்டியில் கூறியது ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது.


என்ன தெரியுங்களா? ‘சாமி-2 நேற்றோ... இன்றோ எடுத்த முடிவு இல்லை, ஏற்கனவே முடிவு செய்த விஷயம். இப்போது அதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளோம்.


சேது, பிதாமகன் போல் ஒரு கதை அமைந்தால் நாளைக்கே பாலாவுடன் சூட்டிங்கிற்கு புறப்பட்டு விடுவேன். என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம்தான் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் பக்கா கமர்ஷியல் படம், மறுபக்கம் உணர்வுபூர்வமான படம் என்று வித்தியாச விக்ரமை பார்க்கலாம் அல்லவா?



మరింత సమాచారం తెలుసుకోండి: