சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணியை தொடர தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது காய்ச்சல் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


அவர் விரைவில் குணமடைய வேண்டி அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஜெயலலிதா விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Image result for அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற வேண்டும். கொள்கை அளவில் வேறுபட்டாலும் அவர் விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.


இதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: