மும்பை:
பாலிவுட் ஹீரோ சல்மான்கானின் தங்கை அர்பிதா வீட்டில் ரூ. 3.25 லட்சம் மதிப்புள்ள பணமும், பொருளும் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


என்ன விஷயம்ன்னா... வெளியூருக்கு சென்றிருந்தார் அர்பிதா. பின்னர் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய அர்பிதா பணம், நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அர்பிதா வீட்டில் வேலை செய்த ஆப்சா என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 


இவர் கடந்த ஜீலை 30ம் தேதியில் இருந்து காணவில்லையாம். ரூ. 2.25 லட்சம், 10 கிராம் தங்கம் போன்றவை கொள்ளை போய் உள்ளதாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: