கடந்த 19-ந்தேதி, விஜய் சேதுபதி நடித்த 'தர்மதுரை' திரைப்படம் ரிலீசானது. இந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று, வெற்றியடைந்து வருகின்றது. 


இந்நிலையில் மூத்த நடிகை ராதிகாவிற்கு, இந்த படத்தில் மரியாதை கொடுக்கவில்லை என்று அவரது கணவரும், நடிகருமான சரத்குமார் டிவிட்டரில் கோபத்துடன் பதிவு செய்துள்ளார். 


'தர்மதுரை படத்தை பார்த்து கொண்டிருக்கையில், எனக்கு வருத்தம் அளித்தது. ஏனென்றால், டைட்டில் கார்டில் மூத்த நடிகையான ராதிகாவை அவமதித்துள்ளது. மூத்த கலைஞர்களுக்கு மரியாதை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறேன்' 


இவ்வாறு அவர் டிவிட் செய்துள்ளார்.


மேலும் தர்மதுரை திரைப்படத்தில், விஜய் சேதுபதியின் அம்மாவாக ராதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



మరింత సమాచారం తెలుసుకోండి: