புதுடில்லி:
யார் அவரோ... யார் அவரோ என்று அனைவரையும் யோசிக்க வைத்து விட்டார் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக். எதற்காக என்று கேட்கிறீர்களா?


ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை மகளிருக்கான மல்யுத்த பிரிவில் (வெண்கல பதக்கம்) வென்று பெருமை சேர்த்தவர் சாக்சி மாலிக்.


 இவர்தான் தற்போது காதலில் விழுந்துள்ளதாக பெரும் ஆரவாரமாக கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், தனது காதலன் பெயரை அவர் இன்னும் குறிப்பிடவில்லை.


 அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று நீங்களே பாருங்களேன். “எனக்கு ஆதரவாக இருப்பவரை நான் திருமணம் செய்ய இருக்கிறேன். அவர் என்னை திருமணத்திற்கு பிறகும் மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க அனுமதிப்பார்.


அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற என் கனவை நனவாக்க அவர் உதவி புரிவார்.” என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு சொன்ன சாக்சி... அவர் யார் என்றும் சொல்லியிருக்கலாமே!



మరింత సమాచారం తెలుసుకోండి: