கடந்த ஆகஸ்ட் 19-ந்தேதி சீனுராமஸ்வாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, ராதிகா, தமன்னா,ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். 


இந்த படம் ரசிகர்களிடம் இருந்து மட்டும் பாராட்டுக்கள் பெறவில்லை, கோலிவுட் நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த படத்தை பார்த்துவிட்டு, தங்கள் வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவித்தனர். 


இதனை தொடர்ந்து தற்போது, நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான சிவகுமார், 'தர்மதுரை' படத்தை பார்த்து விட்டு,இயக்குனர் சீனு ராமஸ்வாமியை பாராட்டி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். 


அதில் அவர் கூறியிருப்பதாவது,


சீனுராமசாமி முழுமையான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திய படம் தர்மதுரை. விஜய்சேதுபதி எல்லாதரப்பு மக்களின் இதயத்திலும் இடம் பிடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். படிப்பில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்ற ஒரு டாக்டரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை, திரையில் விரிகிறது.


 காமராஜரின் மதிய உணவு திட்டத்தில் பசிபோக்கிய ஏழை சிறுவன், மருத்துவ கல்லூரி பேராசிரியராகி காமராஜர் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டது நெஞ்சில் நிலைக்கும் காட்சி. ஏழை மக்களின் வரிப்பணத்தில் படித்து டாக்டரானவர்கள் கிராமத்து ஏழைகளுக்கு வைத்தியம் செய்து நன்றிக்கடன் அடைக்க வேண்டும் என்ற தத்துவம் மருத்துவர்களுக்கு பாடம்.


 தனக்கு தெரியாமல் தன் கருவை கலைத்த டாக்டர் கணவனை தமன்னா விவாகரத்து செய்வதில் உள்ள நியாயம், கல்லூரியில் கதை ஆரம்பித்தவுடன் படம் முடியும் வரை அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்கள். சீனுராமசாமி, வெல்க ராமசாமி
 இதுக்கும் மேலே..மேலே உங்களிடம் எதிர்பார்க்கிறோம்


இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதியிருந்தார்.

dharmadurai sivakumar க்கான பட முடிவு

మరింత సమాచారం తెలుసుకోండి: