உத்தரபிரதேசம்:
ஏழைகள் பயன்படுத்தும் ரேஷன்கார்டில் பாலிவுட் பணக்கார நடிகை பெயர் இருந்தால் அதிர்ச்சியாக இருக்காதா... ஆனால் இருந்திருக்கே... அதுதானே விஷயமோ...


உலகில் அதிக வருமானம் பெறும் நடிகைகளில் முதல் 10 இடங்களில் இடம் பெற்றவர் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன். இவரது பெயர்தான் உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகள் பயன்படுத்தும் ரேஷன்கார்டு பட்டியலில் இருக்குங்க... இது ஆச்சரியம் என்று சொல்வதா... அல்லது வேதனை என்று நொந்து கொள்வதா? 


இவரது பெயர் மட்டுமல்ல முன்னணி இந்தி நடிகைகள் சோனாக்ஷி சின்ஹா, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ராணி முகர்ஜி ஆகியோரது பெயர்களிலும் ரேஷன் கார்டு இருக்காம். அட போங்கய்யா... என்று நொந்து கொள்ளதான் வேண்டியுள்ளது.


கயாம்கஞ்ச் தாலுகா சஹாப்கஞ்ச் கிராமத்தில் உள்ள ரேஷன் கார்டு பயனாளிகள் பட்டியலில் தான் இவர்களது பெயர்கள் உள்ளது. இவர்கள் மானிய விலையில் மாதந்தோறும் ரேஷன் பொருட்களையும் வாங்கி வருவதாக ஆவணங்களில் பதிவாகி உள்ளது. ஆவணங்களில் அந்த நடிகைகளின் கணவர் பெயர்களும் கற்பனையாக குறிப்பிடப்பட்டு உள்ளதுதான் வேதனை.


இதுபற்றி அறிந்த அந்த கிராமத்தினர் ரேஷன்கார்டுகள் வழங்கிய அதிகாரி மீது புகார் அனுப்பியதால்தான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏங்க... இவங்க பெயரில் மட்டும்தான் ரேஷன்கார்டு உலா வந்து இருக்கா... இல்ல இன்னும் நிறைய இருக்கா. 


உரிய நடவடிக்கை எடுக்கும்படி கயாம்கஞ்ச் உதவி கலெக்டர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: