இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில், 'அகிரா' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இப்படம்  வெளிவருகிறது. 


இதையடுத்து முருகதாஸ், ஒரே நேரத்தில் உருவாகவுள்ள தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் ஹிந்தி நடிகை பரினீதி சோப்ரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. 


ஆனால் தற்போது அவருக்கு பதில் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை  ஏ.ஆர்.முருகதாஸ் தனது சமூக வலைதளத்தில்,அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இசை பணிகளை ஹாரிஸ் ஜெயராஜ் மேற்கொள்ளவுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: